Home கோவில்கள் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Walliswarar Temple, வாலிகண்டபுரம்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Walliswarar Temple, வாலிகண்டபுரம்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Walliswarar Temple, வாலிகண்டபுரம்

Arulmigu Walliswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Walliswarar Temple

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

வாலீஸ்வரர்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

வாலிகண்டபுரம்

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

தென்புறத்தில் 1008 பாணம் உள்ளடக்கிய ஒரே லிங்கம். கருவறையில் வாலீஸ்வரர் சுயம்பு மூர்த்தியானதால் சற்றே ஒரு பக்கமாக சாய்ந்து காட்சியருளிக் கொண்டிருக்கிறார். இங்கு வந்திருந்து பூஜை செய்வித்துதான். எதிராளியின் பலத்திலிருந்து சரி பாதியினைத் தன் பலத்துடன் சேர்த்து பெற்றுக் கொண்டு எவரையும் வீழ்த்தும் சக்தியினை வாலி பெற்றதாகப் புராண வரலாறு.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே அழகிய ஏழு நிலை ராஜகோபுரம். அப்படியே நம் மனசுக்குள் எழுந்து நிற்கிறது. திருவுருவச் சிலைகள் ஏதுமற்ற வேலைப்பாடுகளுடனான பீடங்கள் பொருந்திய ராஜகோபுரம் இது. சகஸ்ர கோபுரம் எனக் குறிப்பிடப்படுகிறது. கோபுர உச்சியில் ஒன்பது கலசங்கள் மிளிர்கின்றன. ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில். வாலி பூஜை செய்த இறைவனுக்கு வாலீஸ்வரர் என்றும், ஊருக்கு வாலி கொண்டபுரம் என்றும் பெயர். அதுவே மருவி தற்போது வாலிகண்டபுரம் ஆனாலும் முதலாம் ராஜராஜ சோழன் தனது வெற்றிப் பெயர்களுள் ஒன்றான கேரளாந்தகனை நினைவுபடுத்தும் விதமாக இந்த ஊருக்கு கி.பி 1013 ல் கேரளாந்தகபுரம் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்ததாகக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன.

மகா மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கி துர்க்கை அம்சத்துடன் அன்னை வாலாம்பிகை. நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். கருவறைக்குப் பின்புறமாக மகாமண்டபச் சுற்றில் கை பின்னமான தண்டாயுதபாணியும், பின்னமான தட்சிணாமூர்த்தியும் பதிக்கப்பட்டுள்ளனர். காது மடல் நீண்டு தொங்கும் ஆதி தண்டாயுதபாணி அடுத்து வடமேற்கு மூலையில் ஆதிகாலத்தில் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கொற்றவை.

மகா மண்டப பிராகாரச் சுற்றில் தென் திசையில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் ஏழரை அடி உயரத்தில் கையில் வேலுடன் கருணையே வடிவமாகக் காட்சியளிக்கிறார் தண்டாயுதபாணி, அருணகிரிநாதருக்கு முக்திக்குரிய தலம் எதுவென்று இங்குதான் அருளப்பட்டது. தண்டாயுதபாணியின் திருமுகம் மேற்குப்புறமாக சற்றே சாய்ந்து நளினமும் சாந்தமும் அருளும் நிறைந்து இங்கு காணப்படுவது மிக மிகச் சிறப்பு. வடக்கு திசைநோக்கிய இந்த தண்டாயுதபாணி, எம பயம் நீக்கி நீண்ட ஆயுளைத் தர வல்லவர். பங்குனி உத்திரத் திருவிழா இங்கு மிக முக்கியத் திருவிழா!

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

வாலி பூஜித்த வாலீஸ்வரர் இங்கு சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

அஷ்டமி பூஜை இங்கு வெகு சிறப்பு

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

எம பயம் நீக்கவும், நீண்ட ஆயுள் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Walliswarar Temple:

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் வாலிகண்டபுரம் பெரம்பலூர்.

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here