
Adaikalapathu lyrics in Tamil
பன்னிரு திருமுறைகளில் ஒன்றான அடைக்கலப்பத்து எட்டாம் திருமுறையில் இயற்றப்பட்டுள்ளது இதில் 24 வகையான அடைக்கலப்பத்து நூல்கள் உள்ளது 76 பதிகங்களையும் 1058 பாடல்களையும் கொண்டுள்ளது.

அடைக்கல பத்து:
பாடல் 1:
பத்தி முதலாமவற்றில் பதி எனக்கு கூடாமல்,
எத்திசையும் உழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்,
முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்,
அத்திகிரி அருளாளற்கு அடைக்கலம் நான் புகுந்தேனே
பாடல் 2:
சடைமுடியன் சதுமுகனென் றிவர்முதலாந் தரமெல்லா
மடையவினைப் பயனாகி அழிந்துவிடும் படிகண்டு
கடிமலரால் பிரியாத கச்சிநக ரத்திகிரி
இடமுடைய வருளாள ரிணையடிக ளடைந்தேனே
பாடல் 3:
தந்திரங்கள் வேரின்றித் தமதுவழி யழியாது
மந்திரங்கள் தம்மாலு மற்றுமுள வுரையாலு
மந்தரங்கண் டடிபணிவா ரனைவர்க்கு மருள்புரியுஞ்
சிந்துரவெற் பிறையவனார் சீலமல தறியேனே
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பாடல் 4:
காகமிரக் கதன்மன்னர் காதலிகத் திரபந்து
நாகமர னயன்முதலா நாகநக ரார்த்தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே
பாடல் 5:
உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியன்காவ லெனவாித்துச்
சகத்திலொரு புகலிலாத் தவமறிேயன் மதிட்கச்சி
நகர்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்தேனே
பாடல் 6:
அளவுடையா ரடைந்தார்க்கு மதனுரையே கொண்டவர்க்கும்
வளவுரைதந் தவனருளே மன்னியமா தவத்தோர்க்குங்
களவொழிவா ரெமரென்ன விசைந்தவர்க்குங் காவலராந்
துளவமுடி யருள்வரதர் துவக்கிலெனை வைத்தேனே
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பாடல் 7:
உமதடிக ளடைகின்றே னென்றொருகா லுரைத்தவரை
அமையுமினி யென்பவர்போ லஞ்சலெனக் கரம்வைத்துந்
தமதனைத்து மவர்த்தமக்கு வழங்கியுந்தா மிகவிளங்கு
மமைவுடைய வருளாள ரடியிணையை யடைந்தேனே
பாடல் 8:
திண்மைகுறை யாமைக்கும் நிறைகைக்குந் தீவினையா
லுண்மைமற வாமைக்கு முளமதியி லுகக்கைக்குந்
தண்மைகழி யாமைக்குந் தாிக்கைக்குந் தணிகைக்கும்
வண்மையுடை யருளாளர் வாசகங்கள் மறவேனே
பாடல் 9:
சுாிதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள்
பாிதிமதி யாசிாியர் பாசுரஞ்சேர்ந் தருக்கணங்கள்
கருதியொரு தெளிவாளாற் கலக்கமறுத் தத்திகிாிப்
பாிதிமதி நயனமுடை பரமனடி பணிந்தேனே
பாடல் 10:
திருமகளுந் திருவடியுந் திருவருளுந் தெள்ளறிவு
மருமையிலா மையுமுறவு மளப்பாிய வடியரசுங்
கருமமழிப் பளிப்பமைப்புங் கலக்கமிலா வகைநின்ற
அருள் வரதர் நிலையிலக்கி லம்பெனநா னமிழ்ந்தேனே
பாடல் 11:
ஆறுபயன் வேறில்லா வடியவர்க ளனைவர்க்கு
மாறுமதன் பயனுமிவை யொருகாலும் பலகாலு
மாறுபய னெனவேகண் டருளாள ரடியிணைமேற்
கூறியநற் குணவுரைக ளிவைபத்துங் கோதிலவே
இந்த அடைக்கலப்பத்தை நம் செவிகளில் ஒருமுறை கேட்டாலே, நாம் செய்த பாவங்கள் நீங்கி, எவ்வித துயரமும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]