Homeகோவில்கள்அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் - Arulmigu Atmalingeswarar Temple, புங்கனூர்

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Atmalingeswarar Temple, புங்கனூர்

Arulmigu Atmalingeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Atmalingeswarar Temple

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

ஆத்மலிங்கேஸ்வரர்

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

உமாமகேஸ்வரி

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

புங்கனூர்

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

800 ஆண்டுகளுக்கும் பழமையான இந்தக் கோவிலில், உமாமகேஸ்வரி சமேத ஆத்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். காஞ்சிப்பெரியவர் 70 ஆண்டுகளுக்கு முன் புங்கனூர் வந்தபோது பக்தர்களிடம், இந்த ஊரில் புராதன சிவன் கோயில் இருக்கிறது. அதை உடனே தரிசிக்க வேண்டும், என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் தேட முற்பட்டபோது, சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலைக் கண்டனர். கோயிலுக்கு வந்த காஞ்சிப்பெரியவர், சிவனை வழிபட்டதோடு,இன்னும் பல சிவலிங்கங்கள் இப்பகுதியில் இருக்கலாம், என்றும் கூறினார்.

புங்கனூர் சிவன், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். தெய்வீக சக்தி தானாக வெளிப்படும் இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக இறைவன் எழுந்தருள்வதாக ஐதீகம். இவர் ஆத்மஞானத்தை வழங்குபவராக இறைவன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம் உமாமகேஸ்வரி. உலக வாழ்வுக்கு இகபர சவுபாக்கியத்தை தந்தருள்கிறார். சிவனுக்குரிய பிரதோஷ வேளையில் இங்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைகள் நீங்கி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

கஷ்டங்கள் நீங்கி, சகல ஐஸ்வர்யமும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Atmalingeswarar Temple:

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்
புங்கனூர், வேலூர்.

அருள்மிகு ஆத்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular