Home கோவில்கள் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் – Arulmigu Sokkanathar Temple, திருப்பரங்குன்றம்

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் – Arulmigu Sokkanathar Temple, திருப்பரங்குன்றம்

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் – Arulmigu Sokkanathar Temple, திருப்பரங்குன்றம்

Arulmigu Sokkanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Sokkanathar Temple

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் மூலவர்:

சொக்கநாதர்

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் தாயார்:

மீனாட்சி

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

திருப்பரங்குன்றம்

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் வரலாறு:

தல வரலாறு: கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திரப் பொருளை உபதேசம் செய்தார். அம்பாளின் மடியில் குழந்தையாக இருந்த முருகப்பெருமானும் அந்த மந்திரத்தை கேட்டு விட்டார். பிரணவ மந்திரத்தை குரு முலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக உபதேசம் கேட்டாலும், அதையம் தவறாகவே கருதிய முருகப் பெருமான், மந்திரத்தை முறையா கற்க வேண்டும் என்ற நோக்கில், அதை உபதேசிக்க வேண்டும்மென வேண்டி, திருப்பரங்குன்றம் வந்து தவமிருந்தார். சிவபெருமான் அவர்முன் தோன்றி காட்சிதந்து பரிகார மந்திரம் அருளினார். அந்த இடமே தற்போது ஆதி சொக்கநாதர் கோயில் அமையப்பெற்று, அங்கு ஆதி சொக்கநாதராக சிவபெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

சொக்கநாதர் கோயிலில் மூலவர்கள் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இருவர் சன்னதியிலும் நந்திகள் உள்ளன. மீனாட்சி அம்மன் சுதந்திர சக்தியாக திகழும் ஸ்தலங்களில் எல்லாம் அவர் முன்பு நந்தி இருப்பது ஐதீகம். இங்கும் மீனாட்சி அம்மன் சக்தியாகதிகழ்வதால், அவர் முன்பு நந்தி உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், அம்மன், சுவாமி சன்னதிகளில் மூலவர்கள் எழுந்தருளியிருப்பது போன்று இங்கும் எழுந்தருளியுள்ளனர். தினம் இரண்டுகால பூஜைகள் நடக்கிறது. மார்கழி மாதம் நெல்லி மர விநாயகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பிரதோஷ நாட்களில் சொக்கநாதருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடக்கிறது. வியாழக்கிழமைகளில் குரு பூஜையும், சிவராத்திரியன்று சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் சிறப்பு:

சுப்பிரமணிய சுவாமி கோயிலில்க்களின் போது நடைபெறும் சூரசம்ஹாரம் லீலை நிகழ்ச்சியும், சம்ஹாரத்திற்கான புராண கதைகூறும் நிகழ்வும், சொக்கநாதர் கோயில்முன்புதான் நடக்கிறது.

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

தை தெப்பம், கந்த சஷ்டி, பங்குனித் திருவிழா

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 8 முதல் பகல் 12 மணிவரை மாலை 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்,

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

பூஜைகள் முடிந்து முதல் பந்தியில், சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Sokkanathar Temple:

அருள்மிகு சொக்கநாதர் திருகோயில் திருப்பரங்குன்றம், மதுரை.

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here