Home கோவில்கள் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Sundareswarar Temple, மணக்குடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Sundareswarar Temple, மணக்குடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Sundareswarar Temple, மணக்குடி

Arulmigu Sundareswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Sundareswarar Temple

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

சுந்தரேஸ்வரர்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தாயார்:

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

மணக்குடி

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

உமாதேவிமலைமகளாக அவதரித்து மணப்பருவத்தையடைந்தபோது இமவானாகிய தந்தை தன்னருமைமகளின் அழகையும், தெளிவையும் பார்த்து இவளுக்குத் தக்க கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே எனக் கவன்றனர். பிராட்டியார் தந்தையார் மனக்கருத்து அறிந்து எமக்கு மணவாளன் எல்லாவல்லபமுள்ள முழுமுதற்கடவுளே; அவரே ஏன் கணவராவர். என்தோள் அவரையன்றிச் சேராது என்றனர். தந்தை கவன்று ஐயோ இறைவனா உன்னை மணப்பார். ஒன்றுக்கும் பற்றாத அடியேனுக்கு அவரா மருமகனாவார்? முடியாத காரியத்து முனையலாமா? எனக் கவன்றனர். அம்மை தாயிடம் சென்று, தாயே, நான் தவம் செய்யப் போவேன். தடுக்காது உத்தரவளிக்க வேண்டும் என்றனர். தந்தை கவன்று ஐயோ இறைவனா உன்னை மணப்பார்.

ஒன்றுக்கும் பற்றாத அடியேனுக்கு அவரா மருமகனாவார்? முடியாத காரியத்து முனையலாமா? எனக் கவன்றனர். அம்மை தாயிடம் சென்று, தாயே, நான் தவம் செய்யப் போவேன். தடுக்காது உத்தரவளிக்க வேண்டும் என்றனர். இவ்வார்த்தை கேட்ட மேனை அப்படியாயின் உனது இனிமையழகு எங்கே உனது மெல்லிய பூங்கொம்பு போன்ற உடலமைப்பு எங்கே தவம் எங்கே இந்த வயதிற்கும் தவத்திற்கும் பொருந்தவே பொருந்தாது; வேண்டா வேண்டா எனத் தடுத்தனள். அம்மை அதனையும் கேளாது மீண்டும் தாயிடஞ்சென்று உத்தரவுபெற்று இமையத்துச்சியில் சென்று சிருங்கம் என்னும் இடத்தில் தவஞ்செய்தனர். பல்லாண்டுகளாயின. தரித்திடும் தாழ் சடைப்பொருமான் மணந்துக்கொள்வதாக வரம் அளித்தார்.

தாயும் தந்தையுமில்லாத் தனிப்பரமன் நெருங்கிய அன்புறவு கொண்ட அடியார்களை- முனிபுங்கவர்களை மணம்பேச அனுப்பினார். மண முடித்துக்கொண்டார். அங்ஙனம் மணந்துகொள்ள கவுரி மாயூரத்திற்கு எழுந்தருளி வந்தபோது பெருமான் தங்கிய இடம் மணக்குடியாயிற்று இத்தலத்தில் இறைவர் சவுந்தரநாயகி சமேத சுந்தரேசராக எழுந்தருளி மணக்கோலங் காட்டியருளுகின்றார். இது மாயூரம் துலாக்கட்டத்தின் காவிரியின் வடகரையில் கருங்குயில் நாதன் பேட்டைக்குக் கிழக்கே சற்றேறக் குறைய ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்கிறது. இத்தலம் பொலிழ்சூழ்ந்த அழகிய இடம். மணற்பாங்கான நிலப்பரப்பில் இருப்பதால் மணற்குடியென்று பெயர் வந்ததுபோலும், தருமபுரத்திற்கு அண்மையில் வடகிழக்கு மூலையில் காவிரியின் வடகரையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் விளங்குவது இத்தலம்.

இங்குள்ள கல்யாணதீர்த்தத்தில் மணக்காலத்துப் பிரமன் இதில் நீராடி இறைவருக்கு மணஞ்செய்விக்கும் பேறுபெற்றான்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. இக்கோயில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

இக்கோயிலிற்கு நாலுகால பூசைகள் நடைபெறுகின்றன. மார்கழித்திருவாதிரையில் ஒருநாள் திருவிழாவாக நடராஜப்பெருமான் மட்டும் எழுந்தருளி வீதியுலாவருவார்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடையுள்ளவர்கள் பெரும்பாலானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

திருமணமாகாதவர்கள் இத்தலத்தில் உள்ள சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடைபெறும்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Sundareswarar Temple:

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
மயிலாடுதுறை தாலுக்கா,
மணக்குடி- 609118,
நாகை மாவட்டம்.

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here