Home கோவில்கள் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் – Arulmigu Kayilasanathar Temple, ஆய்க்குடி

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் – Arulmigu Kayilasanathar Temple, ஆய்க்குடி

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் – Arulmigu Kayilasanathar Temple, ஆய்க்குடி

Arulmigu Kayilasanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kayilasanathar Temple

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் மூலவர்:

கயிலாசநாதர்

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் தாயார்:

அபிராமி அம்மன்

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் தல விருட்சம்:

வில்வம்

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

ஆய்க்குடி

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் வரலாறு:

சோழவளநாட்டின் சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூக்கும் மேற்கே 13  கி.மீ.,தொலைவில்  இக்கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சோழ மன்னர்கள் கட்டிய சிவத்தலங்கள் 108ல் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழமையான  இக்கோயில் பழுதடைந்து முட்புதற்கள் மண்டி காணப்பட்டது. அப்பகுதி யினர் கடந்த 1960ம் ஆண்டு வரி  வசூல் செய்து கோயிலை புதுப்பித்து புதிய விக்ரஹங்கள் பிரதிஷ்ட்டை செய்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதன் ஐயர் முயற்சியால் கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் சொந்த செலவில் ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் சுற்றுமதிற்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 1996ம் ஆண்டு கோயில் குடமுழுக்கிற்கு பராமரிப்பு பணிக்காக சுவர் அமைக்க பள்ளம் தோண்டிய போது சம்மந்தர் மற்றும் யோக சக்தியம்மன் ஐம் பொன் விக்ரங்கள் கிடைக்கப்பெற்று தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த விக்கரங்கள் என தெரிவித்துள்ளாக கூறப்படுகிறது. மேலும் வாஞ்சியத்தில் அப்பர் அடிகள் இக்கோயிலை வைப்புத் தலமாக வைத்து பாடியுள்ளார். இப்பகுதியில் இருந்து வெளிநாடு, வெளி மாநிலங்களில் குடி பெயர்ந்துள்ள பக்தர்கள் முக்கிய விசேஷ தினங்களில் இங்கு வந்து ஈசனை வணங்கி செல்கின்றனர்.

சோழர்காலத்தில் கட்டப்பட்ட சிவத்தலங்களில் இக் கோயிலும் ஒன்று. திருக்கடையூர்செல்லமுடியாதவர்கள் இங்கு வந்து செல்கி ன்றனர். மேலும் திருக்கடையூர் சென்று வருவர்களும் வழியில் உள்ள கோயில் என்பதால் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் சிறப்பு:

சோழ வம்சத்தினர்கள் சோழ மண்டலத்தில் கட்டிய 108 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று,திருக்கடையூர் போன்ற கோயில் சிறப்பு.

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:

தமிழ்வருடப்பிறப்பு, ஆடிவெள்ளி, நவராத்திரி, பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், சிவராத்திரி உள்ளிட்ட சிவனுக்குரிய அனைத்தும்.

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

ஆயுள் விருக்தி, நாகதோஷம், புத்திரர் பாக்கியம் மற்றும் திருமணத்தடை, திருக்கடையூர் போன்று சஷ்டி பூர்த்தியும் நடக்கிறது.  சகல ஐஸ்வர்யங்களுக்கும், வியாதிதார்களும் நேரில் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சோழ வம்சத்தினர்கள் சோழ மண்டலத்தில் கட்டிய 108 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று,திருக்கடையூர் போன்ற கோவில் சிறப்பு.

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kayilasanathar Temple:

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்
ஆய்க்குடி, முகுந்தனூர் அஞ்சல்,
குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம் – 61370.

அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here